புராணங்களில் சில காட்சிகள் மூட நம்பிக்கைகளாய்க்
காட்சியளிக்கும்.ஆனால் அவற்றில் ஓர் உண்மை
ஒளிந்திருக்கும் அவற்றில் ஒன்று இங்கே:
அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
[நோக்கம் என்னவென்று புராணம் அறிந்தவர்க்குப்
புரியும்]அமுதம் எழுந்தது.அதன்பின் என்ன நடந்தது.
அமுதம் பங்கிட்டுக்கொள்வதில் இழிவான நடைமுறை
பின்பற்றப்பட்டது.
இங்கே இந்திய சுதந்திரப் போராட்டத்தை நினைவு
கொள்ளுங்கள்.இதில் அமுதம் அருந்தியவர்கள் யார்
நஞ்சருந்தியவர்கள்யார்.இரண்டுக்கும் இடைபட்டவர்
யார்?
இப்போதும் உலகெங்கிலும் பாற்கடல் கடைகின்ற
காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆனாலும் காட்டிக்கொடுப்பவனே நாடாளும்
காட்சியைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
நேதாஜியை,பட்டேலை மறந்ததன் விளைவு
இன்று இந்தியாவே அதை அனுபவித்துக்கொண்டு
இருக்கின்றது.
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment