Friday, April 10, 2009

கம்ப நயம்

இராமாயணத்தில் கரன் வதைபடத்தில் ராமனின் அம்புகளுக்கு
ஆற்றாது அஞ்சி ஓடும் வீரர்களுக்கு கரன் வீரவுரை கூறுவதாக
உள்ள பாடல்:

சினத்தால் சிவக்கப்பெற்ற கண்கள்,அச்சத்தால் பால்போல்
வெளுக்கப்பெற்றவர்களே!உடைந்த மரக்கொம்புகள் நிறைந்த
காட்டில்,போருக்கு ஆற்றாது ஓடுபவர்களே!உங்கள் இல்லத்தில்
மனையாளிடம் முதுகையும் ஊடுருவிய அம்பைக் காட்ட
போகிறீர்களா?இல்லை,கொம்பு காட்டபோகிறீர்களா?
சற்று நில்லுங்கள்.

செம்பு காட்டிய கண் இணை பாலெனத் தெளிந்தீர்!
வெம்பு காட்டிடை நுழைதொறும்,வெரிந் உற பாய்ந்த
கொம்பு காட்டுதி ரோ,தடமார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதி ரோ,குல மங்கையர்ககு?அம்மா!

சொல்லும்,பொருளும்.

செம்பு=சிவப்பு.வெம்பு=வருத்துகின்ற,[வினைத்தொகை]
வெரிந்=முதுகு.கொம்பு=உடைந்த மரக்கிளை.

--------------------------------

No comments:

Post a Comment